கமலாவை கொலை செய்ய முயற்சிக்கும் ரத்தினம்..?

Share the post

கமலாவை கொலை செய்ய முயற்சிக்கும் ரத்தினம்..?

ருத்ராவுக்கு உண்மைகள் தெரிய வருமா..?

கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத்தொடர் “கண்ணெதிரே தோன்றினாள்”.

சக்தியாக சுவேதாவும், ருத்ராவாக மாளவிகா அவிகாஷூம் நடிக்கும் இந்த தொடருக்கு குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், சக்தி, ருத்ராவின் மகள் என்கிற உண்மையை அறிந்த நர்ஸ் கமலா ருத்ரா வீட்டில் வேலைக்கு சேர, ரத்னம் அதிர்ச்சியடைகிறார்.

எனினும், கமலாவுக்கு பழைய நினைவுகள் ஏதும் ஞாபகம் இல்லாததால் பொறுமை காக்கும் ரத்னம், கமலாவுக்கு நினைவுகள் வந்ததை அறிந்து கமலைாவை கொலை செய்ய பல்வேறு வகையில் முயற்சிக்கிறார். ரத்தினத்திடம் இருந்து கமலா தப்பிப்பாரா? ருத்ராவுக்கு உண்மைகள் தெரிய வருமா? என்கிற எதிர்பார்ப்புடன் தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

இந்த நெடுந்தொடரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *